692 products
692 products
692 products
Writer/ரைட்டர் - C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
Regular price Rs. 440.00
இவை ஓர் எழுத்தாளனின் குறிப்புகள். எழுத்து பற்றிய குறிப்புகள். A Writer’s Diary!
எழுத்தாளர், வாசகர், விமர்சகர், பதிப்பகம், ஊடகம், சமூக ஊடகம் என எழுத்து எனும் சூழலமைப்பில் (Ecosystem) புழங்கும் சகலருக்கும் இதில் பெற்றுக்கொள்ள விஷயமுண்டு.
எழுத்து குறித்தும் எழுத்தாளர் குறித்தும், தன்னை முன்வைத்தும் பிறரை முன்னிட்டும், சிறிதும் பெரிதுமாய், தீவிரமும் பகடியுமாய், நல்லதும் கெட்டதுமாய் எழுதப்பட்டவை இவை - அடிப்படையில் ஓர் எழுத்தாளனின் அனுபவங்கள், அறிதல்கள், அபிலாஷைகள். எனவே, எழுத்தை, வாசிப்பை ஆர்வமுடன் அணுகும் எவர்க்கும் இதில் தொடர்புபடுத்திக் கொள்ளத் தருணங்கள் உண்டு. அவை உந்துதலாகவும் திறப்பாகவும் அமையக்கூடும்.
In short, புத்தகங்கள் மீது பிரேமை கொண்டோர் அனைவருக்குமானது இப்புத்தகம்!
Therthal Kadahigal/தேர்தல் கதைகள்-Alok Shukla/அலோக் சுக்லா
Regular price Rs. 200.00
சுதந்திரத்தை மதிக்கும் ஒவ்வொரு இந்தியனும் படிக்கவேண்டிய புத்தகம்.
உங்கள் ஆர்வத்தை ஈர்த்துப்பிடிக்கும் சிறுகதைகளின் இந்தத் தொகுதி வாழ்வின் உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்தியாவின் தேர்தல் அரசியலில் நம்பமுடியாத நிகழ்வு என்பது மக்களை வீடுவீடாக சென்று சந்திப்பது. நூற்றாண்டுகளாக அந்நியர்களிடம் அடைமைப்பட்டுக் கிடந்த, ஏழ்மையான, வளரும் நாட்டில் தேர்தல் ஜனநாயகத்தின் வெற்றி. அது ஒரு அற்புதத்திற்கு இணையானது.
எழுபத்தைந்து சுதந்திர வாழ்க்கையைக் கடந்துவிட்டோம். இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் அந்த சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்தவர்களாக இல்லை. தேர்தல் நடைமுறை என்பது மனிதனின் சுவாசத்தைப்போல வாழ்வின் ஒரு அங்கம். சுதந்திரமான, சமத்துவமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு இந்திய அரசியலமைப்பு தனிப்பட்ட செயலதிகாரத்தை உறுதி செய்திருந்தும், இந்தியாவின் நீதி அமைப்புகள் அதில் தலையிட உரிமையில்லாதிருந்தும், தேர்தலை நடத்துவதற்கு எண்ணற்ற சவால்களை தேர்தல் ஆணையம் சந்திக்கிறது என்பதை ஒரு சிலர் அறிவார்கள்.
இந்தியாவில் தேர்தல் நடத்தப்படும்போது நிகழும் நிகழ்வுகளில் நம்மால் கொண்டாடப்படாத தேர்தல் ஆணையத்தின் பணியாளர்களின் பணிக்குப் பின்னே மறைந்து கிடக்கும் காட்சிகளையும் அவர்கள் சந்திக்கும் உன்னதமான சவால்களையும் இந்தப் புத்தகம் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. இந்தக் கதைகள் சாதாரண மக்களின் கதைகள். அவர்களுடன் பின்னிப்பிணைந்த இந்திய தேர்தல் ஆணைய பணியாளர்கள், பாதுகாப்புத் துறையினர், வேட்பாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், காவல்துறை, எல்லாவற்றுக்கும் மேலாக நம்புவதற்கரிய தைரியத்தை வெளிப்படுத்தியும் உலகின் மிகவும் சிக்கலான மற்றும் கடினமான தேர்தலான இந்தியத் தேர்தல் செயல்பாட்டுக்கான தூண்டுகோலாகவும் இருக்கும் இந்திய வாக்காளர்கள் ஆகியோரைப் பற்றிய கதைகள்.
மனிதனின் சுதந்திரத்துக்கான முடிவற்ற தேடலில் மனிதகுல எழுச்சியின் வெற்றியைக் கொண்டாடுகிறது இப்புத்தகம்.
Thotralum Vidamatten/தோற்றாலும் விடமாட்டேன் - Naseema Razak/நஸீமா ரஸாக்
Regular price Rs. 210.00
வெற்றி அழகானது. ஆனால் தோல்விகள்தாம் அர்த்தமுள்ளவை. கற்றுக்கொள்வதற்கும் மாற்றிக்கொள்வதற்கும் அவை உதவுகின்றன.
வெற்றியாளர்களின் சாதனைகளைவிட, சறுக்கல்களே நமக்குப் பாடங்களாகும்.
இந்தப் புத்தகம், சாதித்தவர்களின் சறுக்கல் புள்ளிகளையும், தவறுகளைக் கண்டறிந்து, திருத்திக்கொண்டு அவர்கள் மேலே ஏறி உச்சம் தொட்ட விதத்தையும் விவரிக்கிறது.
Kazhi Odham/கழி ஓதம்- Ramya Arun Rayen/ரம்யா அருண் ராயன்
Regular price Rs. 170.00
'கழி ஓதம்' என்பது கடலின் நீர்மட்டம் உயருகிற சமயங்களில், கழிமுகங்களில் கடல்நீர் பெருக்கெடுத்துப் புகுவது ஆகும். அவ்வாறே இத்தொகுப்பில் என் மன உணர்வுகள் இந்த பன்னிரு கதைகளைக் கழிமுகமாக்கிப் புகுந்துள்ளன. என்வரையில் இக்கதைகள் எதுவும் முடிந்துவிடவில்லை. இந்த பன்னிரு கதைகளின் தொடர்ச்சியான நிகழ்வுகள், எனக்குள் உருவாகியுள்ள பன்னிரு உலகங்களுக்குள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. நீங்கள் வாசித்துமுடிக்கும்போது உங்களுக்குள்ளும் அதுபோல நிகழ்ந்தால்... உங்களுக்குள் உருவாக்கும் உலகங்களும், எனக்குள் உருவாகும் உலகங்களும் என்றாவது சந்திக்க நேரலாம். அன்று நாம் நம் உணர்வுகளால் ஒருவரையொருவர் தரிசிப்போம்!
- ரம்யா அருண் ராயன்
Kodeeswara Ulagam/கோடீஸ்வர உலகம் -A.Pandiyarajan/அ.பாண்டியராஜன்
Regular price Rs. 270.00
ஃபோர்ப்ஸ் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடுகிறது. அந்தப் பட்டியலைப் பார்த்துவிட்டு கடந்து விடுவதோடு நம் கடமை முடிந்து விடுகிறது. என்றைக்காவது அந்தப் பட்டியலில் இடம்பெற்றுவிட மாட்டோமா என்ற கனவில் உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது இன்றைக்கும் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் இடம்பிடித்த பத்து பேருடைய வாழ்க்கையை கொஞ்சம் நெருங்கி நின்று பார்த்து அவர்கள் என்ன செய்ததால் இந்த உயரத்தை அடைந்தார்கள்? எந்த சக்தி இவர்களை செலுத்தியது? எது இவர்களை செல்வந்தர்களாக்கியது என்ற கேள்விகளுக்கான விடையைத் தேடும் முயற்சிதான் இந்த நூல்.
Gethsemane/கெத்சமனி-Primya Crosswin/ப்ரிம்யா க்ராஸ்வின்
Regular price Rs. 190.00
கெத்சமனி எனப்படுவது, தனது சிலுவைப்பாடுகளின் முன்தினம், ஒரு பலவீனமான பொழுதில், எதிர்வரவிருக்கும் துன்பத்தை எதிர்கொள்ள தன்னைத் தயார் செய்யும்படியாக இயேசு பிரார்த்தனை செய்யச் சென்ற இடமாகும். முழுமையான துயரத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் முன்பாக ஒருவன் தனக்குள் அடையும் உளைச்சலே கெத்சமனித்தருணம். எல்லாருடைய வாழ்விலும் இந்த கெத்சமனி பொழுதுகள் வந்து வந்துதான் செல்லும். ஒருவன் கெத்சமனிக்குள் பிரவேசிக்க அஞ்சினால் அவனுக்கு வாழ்தலும், மீட்பும் இல்லை. இப்புத்தகத்தின் கதை மாந்தர்கள் உங்களைத் தம் கெத்சமனித் தருணத்தினுள் அழைத்துச்செல்வர். எவர் மீதும் தீர்ப்பிடாமல், பிலாத்துவைப் போல, உங்களால் அவர்களைக் கைகழுவிவிட முடிந்தால் நலம்.
Ruskin Bond Sirukathaigal - 2 /ரஸ்கின் பாண்ட் சிறுகதைகள்-2
Regular price Rs. 560.00
ரஸ்கின் பாண்ட் அவருடைய பதினேழாவது வயதில் தன் முதல் நாவலை (The Room on the Roof) எழுதினார். 1957ல் அதற்கு Llewellyn Rhys Memorial Prize கிடைத்தது. அதன் பிறகு அவர் பல நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதியுள்ளார். பெங்குவின் பதிப்பகம் அவற்ற்றை வெளியிட்டுள்ளது. அவர் 500க்கும் மேற்பட்ட கதைகள் எழுதியுள்ளார். 1992ல் பத்மஶ்ரீயும், 2014ல் பத்மபூஷணும் வழங்கி நாடு அவரை கௌரவித்தது.
Alar/அலர்-Narayani Kannagi /நாராயணி கண்ணகி
Regular price Rs. 450.00
எந்த ஒரு பெண்ணும் பாலியல் தொழிலை ஆசைப்பட்டு ஏற்பதில்லை. யாருடைய ஆசைக்கோ பலியாகிறாள். சமூகம் அவளை மீட்டெடுப்பதில்லை.
வரலாறு என்பது மன்னர்களுக்கும் மகாராணிகளுக்கும் மட்டுமானதல்ல. மண்ணில் காலங்கள் புதைந்து கொண்டே இருக்கிறது. புதையுண்ட காலங்களில் நெளியும் எல்லாப் புழுக்களும் ஒன்றே. எந்தப் புழுவும் கிரீடமணியாது. ஆனால் எல்லாப் புழுக்களுக்கும் பசிக்கும். பசித்த புழுக்களுக்கு மகாராணியின் மாமிசமும் பரத்தையின் மாமிசமும் ஒரே ருசிதான்.
பசி வலியது. அதற்கான யுத்தம் கொடுமையானது. உடலின் தேவைக்கு யாரும் பரத்தையாவதில்லை. எரியம் குடலின் தீ நாக்குகளே வாழ்வை சமைக்கின்றன.
பெண்களை நம்பி எத்தனை வயிறுகள்
பெண்களை நம்பி எத்தனை உயிர்கள்
பெண்களை நம்பி எத்தனை பாவங்கள்
மகேஸ்வரி ஒரு பருக்கை, ஒரு தூசி, ஒரு துளி இந்த நரகத்தில்.
Karukurichiyai Thedi/காருகுறிச்சியைத் தேடி-Lalitharam/லலிதாராம்
Regular price Rs. 200.00
காருகுறிச்சி அருணாசலத்தின் வாசஸ்பதியில் ஒன்றரை நிமிடங்கள் ஆனதும் தார ஸ்தாயி காந்தாரத்தில் ஒரு கூவல்.
சத்தியமாய் கூவலேதான். மனித வாசிப்பில் அந்தக் காந்தார வளைவு சாத்தியமேயில்லை. குயிலாக மாறினால்தான் அந்தக் குழைவும் வளைவும் சாத்தியமாகும்.
கைபேசியை நிறுத்திவிட்டு மனத்துள் அந்தக் கூவலை மட்டும் மந்திர ஜெபம் போல ஒலிக்க வைத்தபடி நடந்துகொண்டிருந்தேன்.
திடீரென்று யாரோ தோளைத் தொட்டது போன்ற உணர்வு.
திரும்பிப் பார்த்தேன் – நிஜமாகவே யாரோ என்னைத் தொட்டுக் கூப்பிட்டிருக்கிறார்.
காதிலிருந்து ஹெட்ஃபோன்ஸைக் கழட்டினேன்.
என்னை நிறுத்தியவர் ஏதோ கேட்டார். மனத்தில் ஒன்றும் ஏறவில்லை.
“கியா?” என்று வினவினேன்.
“இதர் வைன் ஷாப் கிதர் ஹை?”
அடப்பாவி! அந்தக் காந்தாரத்தின் போதையில் தள்ளாடியா நடந்தேன்?
Aaru Tharagaigal/ஆறு தாரகைகள்- Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்
Regular price Rs. 450.00
ஹிந்துஸ்தானி இசையைப் பின்புலமாக வைத்து யுவன் சந்திரசேகர் எழுதும் மூன்றாவது நாவல் இது. இரண்டாவது நாவலான ‘நினைவுதிர் காலம்’ வெளியாகி, பதினொரு ஆண்டுகள் கழித்து வெளிவருகிறது.
இசையே பின்புலம் என்றாலும், முந்தைய நாவல்கள் சித்தரித்த உலகம் வேறு; இதில் நிகழ்வது முழுக்க வேறு. அவற்றின் நாயகர்கள் ஆண்கள். இது ஆறு பெண் கலைஞர்களைப் பற்றியது.
முதலாவது நாவல் ‘கானல் நதி’ வாழ்க்கை வரலாறுபோல அமைந்தது. இரண்டாவது நாவலின் வடிவம், முழு நேர்காணல். இந்த நாவல், தனித் தனிக் குறுநாவல்களின் தொகுப்புபோல அமைந்திருக்கிறது. ஒன்றிலொன்று பிணைந்த குறுநாவல்கள்.
இசை பற்றிய எண்ணங்களும், இசை வழங்கும் அனுபவங்களும், அதில் ஈடுபட்ட தனிமனங்களின் அல்லாட்டமும் நிஜம்போன்றே விவரிக்கப்படும் புனைவு. அந்த அளவில், முந்தைய நாவல்களை நினைவூட்டும் உள்ளோட்டமும், இடம்பெறும் அனைவருமே பெண்கள் என்பதால் தனித்துவமான உள்ளடக்கமும் கொண்டது.
Thorkaadhaval/தோற்காதவள்-Gayathri Y/காயத்ரி ஒய்
Regular price Rs. 220.00
Poridarkaalam/போரிடர்க் காலம்-Vinula/வினுலா
Regular price Rs. 250.00
இந்தப் புத்தகம், மாபெரும் யுத்தங்களின் அபாயங்கள் மிகுந்த அந்தரங்க உலகுக்கு உங்களை அழைத்துச் செல்கிறது.
சிரியாவில் யுத்தம். உக்ரைனில் யுத்தம். காஸாவில் யுத்தம். லெபனானில் யுத்தம். எங்கே இல்லை?
யுத்தங்களின் அரசியல், பொருளாதாரக் காரணங்கள் ஒரு புறம் இருக்கட்டும். பல கோடிக் கணக்கில் டாலர்களைக் கொட்டி நடத்தப்படும் இந்த யுத்தங்களை எப்படித் திட்டமிடுகிறார்கள் தெரியுமா? உத்திகள், படைத்திறன், ஆயுத பலம், திருப்பங்கள் போன்றவற்றைத் தீர்மானிக்கும் காரணிகள் எவையெனத் தெரியுமா?
அணுகுண்டுக்கு முந்தைய கால யுத்தங்களில் தொடங்கி, இன்றைய செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் ஆளும் யுத்த காலம் வரை என்ன நடக்கிறது-என்னவெல்லாம் இனி நடக்கப் போகிறதென்று அப்பட்டமாக உடைத்துப் பேசுகிறது இந்நூல்.
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பின் பின்னணியை ஆதாரபூர்வமாக விவரிக்கும் ‘யுத்த காண்டம்’ நூலின் ஆசிரியர் வினுலாவின் அடுத்தப் புத்தகம் இது.
நம்மைச் சுற்றியுள்ள பேரபாயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். வாழ்வதற்கு இன்னும் சில காலம் மிச்சமிருக்கிறது.
Vaan/வான்-Rumman/ரும்மான்
Regular price Rs. 160.00
Valliname Melliname/வல்லினமே மெல்லினமே-Vaasanthi/வாஸந்தி
Regular price Rs. 310.00
சென்னையில் பத்து ஆண்டுகள் பத்திரிகையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்று நான் பிறந்து வளர்ந்த ஊரான பெங்களூருக்குக் குடிபெயர்ந்தபோது எனது பிள்ளைப் பிராயத்து நினைவுகளில் பதிந்திருந்த அமைதி நிறைந்த பெங்களூர் அடையாளம் தெரியாமல் மாறியிருந்தது. எனக்குத் தெரிந்த ஊராக இருக்கவில்லை. கிட்டத்தட்ட அன்னியமாக நான் உணர்ந்த சமயத்தில் பெங்களூரின் புதிய ஆளுமை என்னை சுவாரஸ்யப்படுத்திற்று.
நான் பெங்களூர் வந்த பிறகு இங்கு நதி நீர் பிரச்சினையால் நிகழ்ந்த கலவரங்களையும், பயங்கரவாத குண்டுவெடிப்பு நிகழ்வுகளையும் கண்டபிறகு இந்தக் கேள்விகள் என்னைத் துன்புறுத்தின. என்னுடைய நண்பரும், எனது சில படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வருபவருமான திரு கல்யாணராமன், நான் இளைய தலைமுறையினரைப் பற்றி, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி ஒரு நாவல் எழுதவேண்டும் என்று சொன்னார். ஏற்கெனவே என் மனத்தில் தோன்றிவிட்ட வித்துக்கு அது உரமளித்ததுபோலத் தோன்றிற்று. இங்கு நான் சந்தித்த இளைஞர்கள், அவர்களிடம் நான் தெரிந்துகொண்ட, அவர்களது சூழலைப் பற்றின தகவல்கள், வல்லினமே மெல்லினமே நாவல் உருவாக உதவின. எதிர் காலத்தைப் பற்றின நம்பிக்கையை அவர்கள் ஏற்படுத்தினார்கள். அவர்களிலிருந்து உருவான கதாபாத்திரங்கள்தான் நாவலின் கதைமாந்தர்களாக வரும் பிரபு, குமரன், ஓமார், தீபா, மாலதி மற்றும் ஊர்மிளா. அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றி.
- வாஸந்தி
Therndhedutha Sirukathaigal/தேர்ந்தெடுத்த சிறுகதைகள்-Vaasanthi/வாஸந்தி
Regular price Rs. 290.00
Nirka Nizhal Vendum/நிற்க நிழல் வேண்டும்-Vaasanthi/வாஸந்தி
Regular price Rs. 290.00
வாஸந்தி, குண்டுச்சட்டியில் குதிரையோட்டுகிற ரகமல்ல. இருந்த இடத்தைவிட்டு அசையாமல் அவர் எதையும் எழுதிவிடவில்லை. ‘மௌனப்புயல்' உருவாகும் முன் அவர் பஞ்சாபுக்குச் சென்றார். பொற்கோயிலில் ராணுவம் புகுந்திருந்த தருணம் அது. உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்த சமயம். ஆயினும் அவர் துணிவுடன் பல இடங்களுக்குச் சென்று, பலரைப் பார்த்துப் பேசி, பிரச்சினைகளை மட்டுமின்றி அவற்றுக்குக் காரணமான உள்ளங்களையும் படித்தறிந்தார். பிறகு தான் எழுதினார். “நிற்க நிழல் வேண்டும்” என்ற இந்த நாவலை எழுதுவதற்கு முன்னரும் அவர் இலங்கைக்குச் சென்றார். கொழும்பில் அதிகார வர்க்கத்தினரை மட்டுமின்றி, இந்தியத் தூதரையும் பார்த்துப் பேசினார். வடக்கு-கிழக்கு பகுதிகளில் போராளிகளின் பல்வேறு பிரிவினரையும் சந்தித்தார். பிற நாடுகளில் அவர்களுக்கு உள்ள ஆதரவாளர்களைத் தேடிச் சென்று அளவளாவினார். சராசரி ஈழத் தமிழரையும், அடைக்கலம் என்று இந்தியாவுக்கு வந்து சேர்ந்த அகதிகளையும் கண்டு, அவர்களுடைய உருக்கமான கதைகளைக் கேட்டறிந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக உதவிய தில்லி அதிகாரிகளையும் அவர் விட்டு வைக்கவில்லை. இவற்றிலிருந்து அவருக்குக் கிடைத்த மலைபோன்ற தகவல்களை வடிகட்டி முக்கியமான எதையும் விட்டுவிடாமல் நாவலில் பயன்படுத்தி இருக்கிறார்.
- கி. இராஜேந்திரன், ஆசிரியர், கல்கி
Bayam Kollalagathu/பயம் கொள்ளலாகாது-Jayathi Karthik/ஜெயந்தி கார்த்திக்
Regular price Rs. 270.00
உடல்மொழிப் புரிதலின் அடிப்படையிலேதான் வாழ்வியல் நகர்கிறது. அந்த வாழ்வியலின் ஒவ்வொரு பக்கமும் பக்குவமாக நகர்த்தப்படும் பட்சத்தில், பிற்காலத்தில் அந்த வாழ்வியல் அர்த்தமுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. அந்தப் பக்குவம் எவற்றிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்று யோசிக்கும்போது, அது நமது உடலிலிருந்துதான் தொடங்கப்பட வேண்டும். இத்தெளிவு கிடைத்துவிடும் பட்சத்தில், அந்த உடலைச் சுமந்து வாழும் பாலினத்தையும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும், பழக வேண்டும், முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற தெளிவும் புரிதலும் கிட்டிவிடும்.
இக்கருத்தை மையமாக வைத்தே இந்த ‘பயம் கொள்ளலாகாது’ நாவல் படைக்கப்பட்டுள்ளது. பள்ளிப் பருவத்தில் படிக்கும் கார்முகில் எதிர்கொள்ளும் பாலியல் சிக்கலை முன்னிறுத்தி அதனூடே அவளின் குடும்பம், உறவு நிலைகள், குழந்தைகளுக்கே உண்டான மனநிலைகள், அவர்களின் அன்றாடப் பாடுகள், மகிழ்வுகள் எனப் பல தகவல்கள் அவற்றினூடே விரிகின்றன. பாலியல் என்ற பாடுபொருளைச் சொல்லவோ பேசவோ தயங்கக் கூடாது. எந்தவொரு தோல்விக்குப் பின்னாலும் வாழ்க்கை இருக்கிறது. அந்தத் தோல்வி பணமோ, பொருளோ, நகையோ, நட்போ, வேலையோ, படிப்போ, காதலோ உடலியல் சீண்டலோ அஃது எதுவாயினும் அதற்குப் பிறகான வாழ்க்கை இருக்கிறது. பதின்பருவம் மட்டுமல்ல, அதன் பிறகான பருவத்திலும் உடல்மொழியில் ஏற்படும் சிக்கல்களை எளிதில் கையாண்டு வாழ முடியும் என்பதே இந்த நாவலின் வழி புலப்படுகிறது.
Neruppu Odu/நெருப்பு ஓடு-Devilingam/தேவிலிங்கம்
Regular price Rs. 240.00
Celyon Pediyan/சிலோன் பெடியன்-N. Jeyarupalingam/ந. ஜெயரூபலிங்கம்
Regular price Rs. 240.00
Ceylon Parotta/சிலோன் பரோட்டா-N.R.பிரபாகரன்/N.R.Prabhakaran
Regular price Rs. 290.00
இந்நாவலுடைய நாயகனின் பெயர் பிரபாகரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய நினைவாக சூட்டப்பட்ட பெயர். அது தவிர அவனுக்கும் தலைவருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. நம் நாயகனோ தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு சாமானியன். ஒரு சமயம் அவன் இலங்கையை நோக்கிப் பயணிக்கிறான். அப்பயணத்தில் அவன் எதிர்கொள்ளும் சுவாரஸ்யங்களையும், அதனூடே இலங்கையின் சமகால வாழ்வியலையும் பேசும் இந்த நாவல், போகிறபோக்கில் விடுதலைப் புலிகளைப் பற்றியும் அதன் தலைவரைப் பற்றியும் அவனுக்குத் தோன்றும் எண்ணங்களை தொட்டுச் செல்கிறது.
Urakkam Thelindha Unmai/உறக்கம் தெளிந்த உண்மை-B. Hemamalini/பா. ஹேமமாலினி
Regular price Rs. 230.00
Ilaithavan/இளைத்தவன்-Abul Kalam Azad/அபுல் கலாம் ஆசாத்
Regular price Rs. 250.00
“உன்னையும் மற்றவர்களைப் போலத்தானே வளர்த்தேன் என் ஈரற்குலையே, சலாவுத்தீன்! பாழாய்ப்போன விபத்து...” என்பார்.
உணர்ச்சிவசப்படும் நேரங்களில் அம்மா பேசும் உருது இனிமையானது. சென்னையில் இயல்பாகப் பேசப்படும் உருதுவக்கு முற்றிலும் மாறானது. உணர்ச்சிவசப்படும் நேரங்களில் மட்டும் என்னுடைய அண்ணனையும் அக்காவையும் என்னையும் ‘ஈரற்குலையே' என்றுதான் அழைப்பார். ‘ஜிகர், ஜான், பியார்' என்று தொடர்ந்து உயிரே, அன்பே என உருகுவார். என் ஒல்லியான தோற்றத்தைப் பற்றிக் குறைபட்டுக்கொள்ளும்போது வழக்கமான பாசம் முன்னிலும் இறுக்கமாகி ஒலிக்கும். அந்த நேரத்தில் எப்போது அழுகையின் கேவல் ஒலி அவரிடமிருந்து வெளிப்படுமோ எனும் அச்சத்தில் நான் இருப்பேன்.
ஒல்லியாக இருக்கும் அவன் மீது பாசத்தைக்கொட்டி வளர்க்கும் தாய் ஒருபுறமும், பள்ளிக்கூடத்தில் ஒல்லிக்குச்சி பல்லி கோழிக்கால் என உருவகேலி செய்யும் மாணவர்கள் மறுபுறமும் நின்று சலாவுத்தீனின் பொழுதுகளை நிறைக்கின்றனர்.
உருவகேலியை ஏற்கப் பக்குவப்படும் அவனுடைய மனம் தன்னுடைய அப்பாவின் கறிக்கடைத் தொழில் கேலி செய்யப்படுவதை ஏற்கவில்லை. பொங்க நினைக்கிறான், பிரச்சனை வளர்ந்துவிடுமோ என்னும் அச்சத்தில் அமைதி காக்கிறான். கோபம் மட்டும் ஆறாத நெருப்பாக அவனுள் வளர்ந்துகொண்டிருக்கிறது.
அவன் என்ன முடிவெடுக்கிறான்?
Ayyanarin Mouna Veli/ஐயனாரின் மௌன வெளி-Ananth Ravi/அனந்த் ரவி
Regular price Rs. 260.00
Athini/ அத்தினி-Chitra Sivan/சித்ரா சிவன்
Regular price Rs. 280.00
Iru Uyirgal/இரு உயிர்கள்-Jeevan Benny/ஜீவன் பென்னி
Regular price Rs. 240.00
Iruppu Padhai Manithargal/இருப்புப் பாதை மனிதர்கள்-Latha Saravanan/லதா சரவணன்
Regular price Rs. 280.00
Irandu Gram Yaanai/இரண்டு கிராம் யானை-J.Manjula Devi/ஜே மஞ்சுளாதேவி
Regular price Rs. 180.00
‘ஆதித் தாயை
இன்றும் காட்டும் யானைக் கூட்டம்
அப்பத்தாக்களின் பின்னால்
வரிசையிடும்'
யானைகள் இயற்கையின் அதிசயங்கள் மட்டுமல்ல. நேசத்துக்குரிய பண்புகள் நிறைந்திருக்கும் களஞ்சியங்கள்.
மனிதன் மெச்சத் தகுந்த அறிவுடையவனாயினும் அழிவின் விதைகளை இன்னமும் சுமந்து நிற்கிறான். யானை என்ற வன நாயகன் மூலமாக மனிதனுக்குச் சில உண்மைகளைக் கவிஞர் கனிவோடும் கண்டிப்போடும் சொல்ல விழைகிறார்.
அந்த விழைவின் விளைச்சலே ‘இரண்டு கிராம் யானை’.
புத்தகத்தின் பெயர்தான் ‘இரண்டு கிராம் யானை'யே தவிர கருத்தாலும், வளத்தாலும் கற்பனையாலும் ஆயிரம் பொன் யானை இது என வாசகர்கள் நிச்சயம் உணர்வார்கள்.
- சிற்பி பாலசுப்பிரமணியம்
Rasavaadham/ரசவாதம்-Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்
Regular price Rs. 300.00
Stay up-to-date about new collections, events, discounts and more