388 products
388 products
388 products
Yakutsk Kaidhi/ யகுட்ஸ்க் கைதி - Shreyas Bave/ஷ்ரேயாஸ் பவே
Regular price Rs. 520.00
ஆங்கிலேயர்களுக்கு எதிராக, ஒரு ராணுவத்தையே கட்டியெழுப்பிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்... அவருடைய வீரம் செறிந்த வாழ்வு இறுதியில் என்னவாக ஆயிற்று?
சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு வெவ்வேறு விமானங்களில் ரகசியப் பயணம் மேற்கொண்ட சுபாஷின் கடைசி விமானம் ஃபார்மோசா தீவுப் பகுதியில் விபத்துக்குள்ளாயிற்று. அல்லது அப்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விபத்தில் அவர் இறந்தாரா, மறைந்துபோனாரா? அவரைப் பற்றி அறிந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராகக் காணாமல் போனதில் ஏதேனும் செய்தி இருக்கிறதா? சர்வதேச போலீஸிலிருந்து ரஷ்ய உளவுத்துறைவரை இந்த விவகாரத்தில் செய்த திரைமறைவு வேலைகள் என்னென்ன? உலகின் பல்வேறு நாடுகள் இதைத் தோண்டித் துருவுவதன் பின்னணி என்ன?
இன்னும் எத்தனை எத்தனையோ திகிலூட்டும் கேள்விகளுக்கான பதில்களை இந்த நாவல் ஒன்றோடொன்று பின்னி, எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாது என்கிற விறுவிறு நடையில் சொல்கிறது. ஒரு நாட்டின் மாபெரும் தலைவரின் முடிவு மர்மமாக நீடிப்பதை இண்டு இடுக்கு விடாமல் ஆராய்கிறது இந்தப் புத்தகம். உங்கள் அறிவைச் சீண்டியபடியே எதிர்பாராத சம்பவங்களைக் கோத்து விவரிக்கும் இந்நூல் ஒரு முடிவை நோக்கி உங்களை நகர்த்துகிறது.
Manimegalai Part 2/மணிமேகலை பாகம் 2 - A.Marx/அ.மார்க்ஸ்
Regular price Rs. 290.00
மணிமேகலைக் காவியத்திற்கு “மணிமேகலை துறவு” என்றொரு பெயருமுண்டு. மணிமேகலை துறவு மேற்கொண்டவர். அவரது அன்னை மாதவி ஒரு கணிகை. எனினும் மணிமேகலையின் தந்தை கோவலனின் மரணத்திற்குப் பின் துறவு மேற்கொண்டு அறவாழ்வு வாழ்ந்தவள். மணிமேகலையின் இன்னொரு (பெறா) அன்னையான கண்ணகியின் வரலாறை அறிவோம். கற்புக்கரசியாய் வாழ்ந்து, தன் கற்பின் வலிமையால் நீதியை நிலைநாட்டி மறைந்தவர் அவர். மணிமேகலையும் மாதவியும் துறவு மேற்கொள்கின்றனர். பருவ வயதின் ஈர்ப்புகளிலிருந்து அச்சிறுமி துறவுக்குரிய மேன்மை அடையும் வரலாற்றைச் சொல்வதன் ஊடாக பௌத்த நெறிகளை முன்வைக்கிறது மணிமேகலைக் காப்பியம்.
துறவென்பது என்ன? பற்றறுப்பு எனும் பொருளில் உடன்பாடில்லை. வேறென்ன? தன் குடும்பம், தன் பிள்ளை, பிதிர், பேத்தி என்பதாக அன்றி உலக மாந்தரையே வேறுபாடுகளின்றி உறவு
’ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்
கயக்கறு நல்லறம் கண்டனை என்றலும்…”
-என்பது மணிமேகலை.
Oliyin Mugam/Face of Light-Kutti Revathi/குட்டி ரேவதி
Regular price Rs. 130.00
“ஒளியின் முகம்”, குட்டி ரேவதியின் இருமொழி நூல். லட்சுமி ஹோம்ஸ்ட்ராம், எத்திராஜ் அகிலன், விவேக் நாராயணன் ஆகிய மொழிபெயர்ப்பாளர்கள் குட்டி ரேவதியின் வெவ்வேறு எழுத்துக்காலகட்டத்தில் அவரின் உடல்மொழி இலக்கிய மொழி குன்றாது மொழிபெயர்த்த கவிதைகளின் தொகுப்பு. தமிழ் & ஆங்கிலம் இரு மொழியிலும் பயணிக்கும் புதிய அனுபவத்தைத் தரும்படியாக இந்த நூல் வெளியிடப்படுகிறது. மொழிச்சுவை, கவிச்சுவை போற்றும் படியான ஈடுபாட்டை, உழைப்பை இம்மொழிபெயர்ப்பாளர்கள் தந்துள்ளனர் என்பதற்கு இத்தொகுப்பு ஓர் உயரிய சான்று.
Revathi's anthology ‘Oliyin Mugam’ (Face of Light) features poems from various phases of her career. Translated by Lakshmi Holmstrom, a critic and translator of eminence, Vivek Narayanan, a poet of repute and erstwhile co-editor of the popular Indian Literary Journal, Almost Island, and Ethiraj Akilan, a freelancer, these translations capture Revathi’s literary flair and the unique language of the female body and psyche. This bilingual anthology allows readers to experience the richness of two languages simultaneously.
Nizhal Bommai/நிழல் பொம்மை - R.Abilash/ஆர். அபிலாஷ்
Regular price Rs. 540.00
ஏதோ ஒரு தருணத்தில் ஒரு குள்ளன் தன்னை மிகுந்த உயரமானவனாக, உலகின் மிகப் பெரியவனாக, அதிமனிதனாகக் கருத ஆரம்பிக்கிறான். அது எதிர்பாலினத்துடனான அவனது உறவுகளில், அவனது அறமதிப்பீடுகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. அதன்பிறகு அவனுக்கு என்னவாகிறது என்பதே இந்நாவலின் ஒற்றைவரி. சர்வாதிகாரம் எங்கோ அரசியல் தளத்தில் சிறைக் கொட்டடியிலோ காவல்துறையினரின் துப்பாக்கி முனையிலோ அதிகார மட்டத்திலோ நிகழ்வதல்ல, அது நமது அன்றாட வாழ்வினுள், அந்தரங்க நடத்தையில், சிந்தனையில் நுணுக்கமாகச் செயல்படுவது என்பதை இந்நாவல் சித்தரிக்கிறது. அன்பின், காதலின், கசப்பின், சுரண்டலின் அரசியலைப் பேசுகிறது. அரசியலையும் அதிகாரத்தையும் தத்துவத்தையும் ஒரே புள்ளியில் இணைத்து பாலியல் ஒழுக்கத்தை விசாரிப்பதன் வழியாகத் தமிழில் வெளிவந்த நாவல்களில் தனித்துவமானதாகிறது.
Katharkal/காதற்கள்-Sowmya/சௌம்யா
Regular price Rs. 280.00
காதலை முன்வைத்த குறுநாவல்கள் இவை. ஒன்று ஆணின் காதல் பற்றியது, மற்றது பெண் காதல் பற்றியது. எளிய வடிவம் கொண்டிருந்தாலும் இக்கதைகளில் பயின்று வரும் அசலான உளப் போராட்டங்கள் இவற்றை வேறு தளத்துக்கு நகர்த்துகின்றன. குறிப்பாகப் பாத்திரங்களை அதனதன் நியாயங்களைப் பேச வைத்திருப்பது ஒரு விதப் பன்முகத்தன்மையை வழங்குகிறது. எத்தனை பேசினாலும் காதல் பற்றிய விஷயங்கள் மட்டும் நீர்த்துப் போவதோ தீர்ந்து போவதோ இல்லை. காதலை வியந்துகொண்டோ வெறுத்துக்கொண்டோதான் மனிதன் வாழ முடியும் - இரண்டுக்கும் மத்தியில் எளிதில் கடக்க முடியாது. அதையே இக்கதைகள் அடிக்கோடிடுகின்றன.
Appammai/அப்பாம்மை - Gayathri R/காயத்ரி ஆர்.
Regular price Rs. 120.00
சிந்தனை வரலாற்றில் உரையாடலை முக்கியப்படுத்தியவர்கள் இரண்டு பேர்: பிளேட்டோ மற்றும் ரூஸ்ஸோ.
உரையாடலின் மூலம்தான் ஒரு மொழியின் பேச்சு வழக்கு செயல்படுத்தப்படுகிறது. பேச்சு வழக்கு என்பது குறிப்பிட்ட ஒரு இனம் அல்லது குழுவின் மொழி அடையாளம். அது மட்டும் அல்ல, இது அந்த இனம்
வாழும் நிலம்/இடம், அது சார்ந்திருக்கும் வர்க்கம் போன்றவற்றையும் அடையாளப் படுத்தக் கூடியது.
இந்தப் பின்னணியில் காயத்ரியின் இந்தச் சிறுகதைத் தொகுப்பில்
உள்ள இரண்டு சிறுகதைகள் மிகுந்த முக்கியத்துவம் கொண்டவை.
அக்கதைகளில் இடம் பெறும் உரையாடல்களின் மூலம் சென்ற தலைமுறையின் பேச்சு வழக்கு இலக்கியத் தகுதியைப் பெறுவதோடு
அல்லாமல் அத்தலைமுறையின் வாழ்வும் பதிவு செய்யப்பட்டு
விடுகிறது. நான் உதாரணங்கள் தரப் போவதில்லை. அதை வாசகரே
படித்துத் தெரிந்து கொள்ளலாம் என்பதால்.
Vilaiyaada Vandha Endhira Boodham/விளையாட வந்த எந்திர பூதம் - Perundevi/பெருந்தேவி
Regular price Rs. 120.00
புதிய சொல்முறைகள் சாத்தியம்தானா என்ற தேடல் மட்டுமின்றி பழைய பாணிகள், வடிவங்கள், சொல்லடுக்குகளுடனான பிணக்கும் விடுபடலும் பெருந்தேவியின் கவிதை எழுத்தை நெறிப்படுத்துகின்றன. கவிதை கொண்டு உலகைப் புதிதாய் இன்னொருமுறை தரிசிக்க முடியும் என்ற நப்பாசைக்கும், இல்லை கடையை மூடிக்கொண்டு கிளப்பலாம் என்ற அவநம்பிக்கைக்கும் இடையே உள்ள சாத்தியங்களை மொழிக்குள் கொண்டுவர முயல்பவை இக்கவிதைகள்.
- ஹரி இராஜலெட்சுமி
Manimegalai Part 1/மணிமேகலை பாகம் 1 - A.Marx/அ.மார்க்ஸ்
Regular price Rs. 420.00
மணிமேகலைக் காவியத்திற்கு “மணிமேகலை துறவு” என்றொரு பெயருமுண்டு. மணிமேகலை துறவு மேற்கொண்டவர். அவரது அன்னை மாதவி ஒரு கணிகை. எனினும் மணிமேகலையின் தந்தை கோவலனின் மரணத்திற்குப் பின் துறவு மேற்கொண்டு அறவாழ்வு வாழ்ந்தவள். மணிமேகலையின் இன்னொரு (பெறா) அன்னையான கண்ணகியின் வரலாறை அறிவோம். கற்புக்கரசியாய் வாழ்ந்து, தன் கற்பின் வலிமையால் நீதியை நிலைநாட்டி மறைந்தவர் அவர். மணிமேகலையும் மாதவியும் துறவு மேற்கொள்கின்றனர். பருவ வயதின் ஈர்ப்புகளிலிருந்து அச்சிறுமி துறவுக்குரிய மேன்மை அடையும் வரலாற்றைச் சொல்வதன் ஊடாக பௌத்த நெறிகளை முன்வைக்கிறது மணிமேகலைக் காப்பியம்.
துறவென்பது என்ன? பற்றறுப்பு எனும் பொருளில் உடன்பாடில்லை. வேறென்ன? தன் குடும்பம், தன் பிள்ளை, பிதிர், பேத்தி என்பதாக அன்றி உலக மாந்தரையே வேறுபாடுகளின்றி உறவு
’ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்
கயக்கறு நல்லறம் கண்டனை என்றலும்…”
-என்பது மணிமேகலை.
Nallaangu/நல்லாங்கு - Nesamithran/நேசமித்ரன்
Regular price Rs. 300.00
நீ இல்லாமல் வாழவே
முடியாதென்பதெல்லாம்
பொய்
நீ இருந்தால்
இன்னும் நன்றாக வாழ்வேன்
அவ்வளவுதான்...
- நேசமித்ரன்
Manpuzhuvin Naangavadhu Idhayam/மண்புழுவின் நான்காவது இதயம்-Nesamithran/நேசமித்ரன்
Regular price Rs. 140.00
தொன்மத்தின் சடங்கு மொழியில் நவீன விஞ்ஞானத்தின் சூட்சுமங்களை
நேசமித்ரன் கவிதையாக்குகிறார். அவரது மொழி வேட்கையும்
உயிரினங்களின் மீதான அதீத உற்று நோக்கலும் உயிரினங்களின்
நடத்தைகளை கவிதை மொழியாக்குகின்றன. அதனால்தான் காதுகளே
வௌவாலின் கண்களாக நமக்குத் தெரிகிறது.
ஆகாயம் மற்றும் நிலத் தோற்றங்களின் மீது மொழி மண்புழுபோல் படிந்து
ஊர்கிறது. இவரது கவிதைகளில் ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் புழுத்த
நம்பிக்கைகள் மற்றும் அற எல்லைகள் கடந்த கார்ப்பரேட் யுகத்தின்
வாழ்வுமுறைகள் சாட்சியமாகின்றன.
கவிதை என்பது ஒரு தனித்த துறையல்ல. பல்வேறு துறை சார்ந்த வாசிப்பு
அனுபவங்களிலிருந்து இவர் தமிழ் கவிதைகளுக்கான புதிய கலைச்
சொற்களை உருவாக்குகிறார். அவ்வகையில் நேசமித்ரன் கவிதைகள் தமிழ்
நவீன கவிதையின் விஸ்தரிப்பு.
- செல்மா பிரியதர்ஸன்
Bramai Kai/ பிரமைக் கை- Bogan Sankar/போகன் சங்கர்
Regular price Rs. 310.00
இந்தத் தொகுப்பில் பெரும்பாலானவை குறுங்கதைகள். குறுங்கதைகள் சமகாலத்தின் மிகச் சிறந்த வடிவமாக மேலெழுந்து வந்ததில் போகன் சங்கருக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்தக் கதைகள், குறுங்கதைகள் அடையக்கூடிய பல்வேறு விதமான சாத்தியங்களையும் அவை அடையக்கூடிய முழுமையையும் காட்டுகின்றன
Pinthodarthal/பின்தொடர்தல் - Manusha Prabani Dissanayake/மனுஷா ப்ரபானி திஸாநாயக்க
Regular price Rs. 150.00
‘மலரினும் மெல்லியது காதல்’ என்ற புரிதலுடன் கதையை விவரித்துள்ள மனுஷா ப்ரபானியின் எழுத்து, சமகாலப் பெண்ணிய எழுத்துகளில் தனித்துவமானது. மனதில் தோன்றும் மெல்லிய உணர்வுகளை அப்படியே மொழியில் பதிவாக்கிடுவது ஒருவகையில் சவால். மனுஷா ப்ரபானி நுட்பமான சொற்களில் பெண் மனதைச் சித்திரித்துள்ளார். காதல் என்ற உணர்வைப் பெண் மைய நோக்கில் விவரிக்கும் மனுஷா ப்ரபானி எழுதிய கதைகளில் இதுவரை பெண் பற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள புனைவுகள் நொறுங்குகின்றன. கதைகளை வாசிக்கையில் காதலர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியும், வேதனையும் ஏற்படுவது ஒருவகையில் விநோதம்தான். யதார்த்தத்தில் காதலர்களின் அனுபவங்கள், பிரதிகளின் வழியாகப் பதிவாகி, அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்லப்படும் விநோதம் நிகழ்கின்றது.
- ந. முருகேசபாண்டியன்
Therthal Kadahigal/தேர்தல் கதைகள்-Alok Shukla/அலோக் சுக்லா
Regular price Rs. 200.00
சுதந்திரத்தை மதிக்கும் ஒவ்வொரு இந்தியனும் படிக்கவேண்டிய புத்தகம்.
உங்கள் ஆர்வத்தை ஈர்த்துப்பிடிக்கும் சிறுகதைகளின் இந்தத் தொகுதி வாழ்வின் உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்தியாவின் தேர்தல் அரசியலில் நம்பமுடியாத நிகழ்வு என்பது மக்களை வீடுவீடாக சென்று சந்திப்பது. நூற்றாண்டுகளாக அந்நியர்களிடம் அடைமைப்பட்டுக் கிடந்த, ஏழ்மையான, வளரும் நாட்டில் தேர்தல் ஜனநாயகத்தின் வெற்றி. அது ஒரு அற்புதத்திற்கு இணையானது.
எழுபத்தைந்து சுதந்திர வாழ்க்கையைக் கடந்துவிட்டோம். இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் அந்த சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்தவர்களாக இல்லை. தேர்தல் நடைமுறை என்பது மனிதனின் சுவாசத்தைப்போல வாழ்வின் ஒரு அங்கம். சுதந்திரமான, சமத்துவமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு இந்திய அரசியலமைப்பு தனிப்பட்ட செயலதிகாரத்தை உறுதி செய்திருந்தும், இந்தியாவின் நீதி அமைப்புகள் அதில் தலையிட உரிமையில்லாதிருந்தும், தேர்தலை நடத்துவதற்கு எண்ணற்ற சவால்களை தேர்தல் ஆணையம் சந்திக்கிறது என்பதை ஒரு சிலர் அறிவார்கள்.
இந்தியாவில் தேர்தல் நடத்தப்படும்போது நிகழும் நிகழ்வுகளில் நம்மால் கொண்டாடப்படாத தேர்தல் ஆணையத்தின் பணியாளர்களின் பணிக்குப் பின்னே மறைந்து கிடக்கும் காட்சிகளையும் அவர்கள் சந்திக்கும் உன்னதமான சவால்களையும் இந்தப் புத்தகம் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. இந்தக் கதைகள் சாதாரண மக்களின் கதைகள். அவர்களுடன் பின்னிப்பிணைந்த இந்திய தேர்தல் ஆணைய பணியாளர்கள், பாதுகாப்புத் துறையினர், வேட்பாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், காவல்துறை, எல்லாவற்றுக்கும் மேலாக நம்புவதற்கரிய தைரியத்தை வெளிப்படுத்தியும் உலகின் மிகவும் சிக்கலான மற்றும் கடினமான தேர்தலான இந்தியத் தேர்தல் செயல்பாட்டுக்கான தூண்டுகோலாகவும் இருக்கும் இந்திய வாக்காளர்கள் ஆகியோரைப் பற்றிய கதைகள்.
மனிதனின் சுதந்திரத்துக்கான முடிவற்ற தேடலில் மனிதகுல எழுச்சியின் வெற்றியைக் கொண்டாடுகிறது இப்புத்தகம்.
Kazhi Odham/கழி ஓதம்- Ramya Arun Rayen/ரம்யா அருண் ராயன்
Regular price Rs. 170.00
'கழி ஓதம்' என்பது கடலின் நீர்மட்டம் உயருகிற சமயங்களில், கழிமுகங்களில் கடல்நீர் பெருக்கெடுத்துப் புகுவது ஆகும். அவ்வாறே இத்தொகுப்பில் என் மன உணர்வுகள் இந்த பன்னிரு கதைகளைக் கழிமுகமாக்கிப் புகுந்துள்ளன. என்வரையில் இக்கதைகள் எதுவும் முடிந்துவிடவில்லை. இந்த பன்னிரு கதைகளின் தொடர்ச்சியான நிகழ்வுகள், எனக்குள் உருவாகியுள்ள பன்னிரு உலகங்களுக்குள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. நீங்கள் வாசித்துமுடிக்கும்போது உங்களுக்குள்ளும் அதுபோல நிகழ்ந்தால்... உங்களுக்குள் உருவாக்கும் உலகங்களும், எனக்குள் உருவாகும் உலகங்களும் என்றாவது சந்திக்க நேரலாம். அன்று நாம் நம் உணர்வுகளால் ஒருவரையொருவர் தரிசிப்போம்!
- ரம்யா அருண் ராயன்
Gethsemane/கெத்சமனி-Primya Crosswin/ப்ரிம்யா க்ராஸ்வின்
Regular price Rs. 190.00
கெத்சமனி எனப்படுவது, தனது சிலுவைப்பாடுகளின் முன்தினம், ஒரு பலவீனமான பொழுதில், எதிர்வரவிருக்கும் துன்பத்தை எதிர்கொள்ள தன்னைத் தயார் செய்யும்படியாக இயேசு பிரார்த்தனை செய்யச் சென்ற இடமாகும். முழுமையான துயரத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் முன்பாக ஒருவன் தனக்குள் அடையும் உளைச்சலே கெத்சமனித்தருணம். எல்லாருடைய வாழ்விலும் இந்த கெத்சமனி பொழுதுகள் வந்து வந்துதான் செல்லும். ஒருவன் கெத்சமனிக்குள் பிரவேசிக்க அஞ்சினால் அவனுக்கு வாழ்தலும், மீட்பும் இல்லை. இப்புத்தகத்தின் கதை மாந்தர்கள் உங்களைத் தம் கெத்சமனித் தருணத்தினுள் அழைத்துச்செல்வர். எவர் மீதும் தீர்ப்பிடாமல், பிலாத்துவைப் போல, உங்களால் அவர்களைக் கைகழுவிவிட முடிந்தால் நலம்.
Ruskin Bond Sirukathaigal - 2 /ரஸ்கின் பாண்ட் சிறுகதைகள்-2
Regular price Rs. 560.00
ரஸ்கின் பாண்ட் அவருடைய பதினேழாவது வயதில் தன் முதல் நாவலை (The Room on the Roof) எழுதினார். 1957ல் அதற்கு Llewellyn Rhys Memorial Prize கிடைத்தது. அதன் பிறகு அவர் பல நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதியுள்ளார். பெங்குவின் பதிப்பகம் அவற்ற்றை வெளியிட்டுள்ளது. அவர் 500க்கும் மேற்பட்ட கதைகள் எழுதியுள்ளார். 1992ல் பத்மஶ்ரீயும், 2014ல் பத்மபூஷணும் வழங்கி நாடு அவரை கௌரவித்தது.
Alar/அலர்-Narayani Kannagi /நாராயணி கண்ணகி
Regular price Rs. 450.00
எந்த ஒரு பெண்ணும் பாலியல் தொழிலை ஆசைப்பட்டு ஏற்பதில்லை. யாருடைய ஆசைக்கோ பலியாகிறாள். சமூகம் அவளை மீட்டெடுப்பதில்லை.
வரலாறு என்பது மன்னர்களுக்கும் மகாராணிகளுக்கும் மட்டுமானதல்ல. மண்ணில் காலங்கள் புதைந்து கொண்டே இருக்கிறது. புதையுண்ட காலங்களில் நெளியும் எல்லாப் புழுக்களும் ஒன்றே. எந்தப் புழுவும் கிரீடமணியாது. ஆனால் எல்லாப் புழுக்களுக்கும் பசிக்கும். பசித்த புழுக்களுக்கு மகாராணியின் மாமிசமும் பரத்தையின் மாமிசமும் ஒரே ருசிதான்.
பசி வலியது. அதற்கான யுத்தம் கொடுமையானது. உடலின் தேவைக்கு யாரும் பரத்தையாவதில்லை. எரியம் குடலின் தீ நாக்குகளே வாழ்வை சமைக்கின்றன.
பெண்களை நம்பி எத்தனை வயிறுகள்
பெண்களை நம்பி எத்தனை உயிர்கள்
பெண்களை நம்பி எத்தனை பாவங்கள்
மகேஸ்வரி ஒரு பருக்கை, ஒரு தூசி, ஒரு துளி இந்த நரகத்தில்.
Aaru Tharagaigal/ஆறு தாரகைகள்- Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்
Regular price Rs. 450.00
ஹிந்துஸ்தானி இசையைப் பின்புலமாக வைத்து யுவன் சந்திரசேகர் எழுதும் மூன்றாவது நாவல் இது. இரண்டாவது நாவலான ‘நினைவுதிர் காலம்’ வெளியாகி, பதினொரு ஆண்டுகள் கழித்து வெளிவருகிறது.
இசையே பின்புலம் என்றாலும், முந்தைய நாவல்கள் சித்தரித்த உலகம் வேறு; இதில் நிகழ்வது முழுக்க வேறு. அவற்றின் நாயகர்கள் ஆண்கள். இது ஆறு பெண் கலைஞர்களைப் பற்றியது.
முதலாவது நாவல் ‘கானல் நதி’ வாழ்க்கை வரலாறுபோல அமைந்தது. இரண்டாவது நாவலின் வடிவம், முழு நேர்காணல். இந்த நாவல், தனித் தனிக் குறுநாவல்களின் தொகுப்புபோல அமைந்திருக்கிறது. ஒன்றிலொன்று பிணைந்த குறுநாவல்கள்.
இசை பற்றிய எண்ணங்களும், இசை வழங்கும் அனுபவங்களும், அதில் ஈடுபட்ட தனிமனங்களின் அல்லாட்டமும் நிஜம்போன்றே விவரிக்கப்படும் புனைவு. அந்த அளவில், முந்தைய நாவல்களை நினைவூட்டும் உள்ளோட்டமும், இடம்பெறும் அனைவருமே பெண்கள் என்பதால் தனித்துவமான உள்ளடக்கமும் கொண்டது.
Poridarkaalam/போரிடர்க் காலம்-Vinula/வினுலா
Regular price Rs. 250.00
இந்தப் புத்தகம், மாபெரும் யுத்தங்களின் அபாயங்கள் மிகுந்த அந்தரங்க உலகுக்கு உங்களை அழைத்துச் செல்கிறது.
சிரியாவில் யுத்தம். உக்ரைனில் யுத்தம். காஸாவில் யுத்தம். லெபனானில் யுத்தம். எங்கே இல்லை?
யுத்தங்களின் அரசியல், பொருளாதாரக் காரணங்கள் ஒரு புறம் இருக்கட்டும். பல கோடிக் கணக்கில் டாலர்களைக் கொட்டி நடத்தப்படும் இந்த யுத்தங்களை எப்படித் திட்டமிடுகிறார்கள் தெரியுமா? உத்திகள், படைத்திறன், ஆயுத பலம், திருப்பங்கள் போன்றவற்றைத் தீர்மானிக்கும் காரணிகள் எவையெனத் தெரியுமா?
அணுகுண்டுக்கு முந்தைய கால யுத்தங்களில் தொடங்கி, இன்றைய செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் ஆளும் யுத்த காலம் வரை என்ன நடக்கிறது-என்னவெல்லாம் இனி நடக்கப் போகிறதென்று அப்பட்டமாக உடைத்துப் பேசுகிறது இந்நூல்.
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பின் பின்னணியை ஆதாரபூர்வமாக விவரிக்கும் ‘யுத்த காண்டம்’ நூலின் ஆசிரியர் வினுலாவின் அடுத்தப் புத்தகம் இது.
நம்மைச் சுற்றியுள்ள பேரபாயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். வாழ்வதற்கு இன்னும் சில காலம் மிச்சமிருக்கிறது.
Valliname Melliname/வல்லினமே மெல்லினமே-Vaasanthi/வாஸந்தி
Regular price Rs. 310.00
சென்னையில் பத்து ஆண்டுகள் பத்திரிகையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்று நான் பிறந்து வளர்ந்த ஊரான பெங்களூருக்குக் குடிபெயர்ந்தபோது எனது பிள்ளைப் பிராயத்து நினைவுகளில் பதிந்திருந்த அமைதி நிறைந்த பெங்களூர் அடையாளம் தெரியாமல் மாறியிருந்தது. எனக்குத் தெரிந்த ஊராக இருக்கவில்லை. கிட்டத்தட்ட அன்னியமாக நான் உணர்ந்த சமயத்தில் பெங்களூரின் புதிய ஆளுமை என்னை சுவாரஸ்யப்படுத்திற்று.
நான் பெங்களூர் வந்த பிறகு இங்கு நதி நீர் பிரச்சினையால் நிகழ்ந்த கலவரங்களையும், பயங்கரவாத குண்டுவெடிப்பு நிகழ்வுகளையும் கண்டபிறகு இந்தக் கேள்விகள் என்னைத் துன்புறுத்தின. என்னுடைய நண்பரும், எனது சில படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வருபவருமான திரு கல்யாணராமன், நான் இளைய தலைமுறையினரைப் பற்றி, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி ஒரு நாவல் எழுதவேண்டும் என்று சொன்னார். ஏற்கெனவே என் மனத்தில் தோன்றிவிட்ட வித்துக்கு அது உரமளித்ததுபோலத் தோன்றிற்று. இங்கு நான் சந்தித்த இளைஞர்கள், அவர்களிடம் நான் தெரிந்துகொண்ட, அவர்களது சூழலைப் பற்றின தகவல்கள், வல்லினமே மெல்லினமே நாவல் உருவாக உதவின. எதிர் காலத்தைப் பற்றின நம்பிக்கையை அவர்கள் ஏற்படுத்தினார்கள். அவர்களிலிருந்து உருவான கதாபாத்திரங்கள்தான் நாவலின் கதைமாந்தர்களாக வரும் பிரபு, குமரன், ஓமார், தீபா, மாலதி மற்றும் ஊர்மிளா. அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றி.
- வாஸந்தி
Therndhedutha Sirukathaigal/தேர்ந்தெடுத்த சிறுகதைகள்-Vaasanthi/வாஸந்தி
Regular price Rs. 290.00
Nirka Nizhal Vendum/நிற்க நிழல் வேண்டும்-Vaasanthi/வாஸந்தி
Regular price Rs. 290.00
வாஸந்தி, குண்டுச்சட்டியில் குதிரையோட்டுகிற ரகமல்ல. இருந்த இடத்தைவிட்டு அசையாமல் அவர் எதையும் எழுதிவிடவில்லை. ‘மௌனப்புயல்' உருவாகும் முன் அவர் பஞ்சாபுக்குச் சென்றார். பொற்கோயிலில் ராணுவம் புகுந்திருந்த தருணம் அது. உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்த சமயம். ஆயினும் அவர் துணிவுடன் பல இடங்களுக்குச் சென்று, பலரைப் பார்த்துப் பேசி, பிரச்சினைகளை மட்டுமின்றி அவற்றுக்குக் காரணமான உள்ளங்களையும் படித்தறிந்தார். பிறகு தான் எழுதினார். “நிற்க நிழல் வேண்டும்” என்ற இந்த நாவலை எழுதுவதற்கு முன்னரும் அவர் இலங்கைக்குச் சென்றார். கொழும்பில் அதிகார வர்க்கத்தினரை மட்டுமின்றி, இந்தியத் தூதரையும் பார்த்துப் பேசினார். வடக்கு-கிழக்கு பகுதிகளில் போராளிகளின் பல்வேறு பிரிவினரையும் சந்தித்தார். பிற நாடுகளில் அவர்களுக்கு உள்ள ஆதரவாளர்களைத் தேடிச் சென்று அளவளாவினார். சராசரி ஈழத் தமிழரையும், அடைக்கலம் என்று இந்தியாவுக்கு வந்து சேர்ந்த அகதிகளையும் கண்டு, அவர்களுடைய உருக்கமான கதைகளைக் கேட்டறிந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக உதவிய தில்லி அதிகாரிகளையும் அவர் விட்டு வைக்கவில்லை. இவற்றிலிருந்து அவருக்குக் கிடைத்த மலைபோன்ற தகவல்களை வடிகட்டி முக்கியமான எதையும் விட்டுவிடாமல் நாவலில் பயன்படுத்தி இருக்கிறார்.
- கி. இராஜேந்திரன், ஆசிரியர், கல்கி
The Illusory River-Yuvan Chandrasekar
Regular price Rs. 400.00
A tragic tale of the life of a failed Hindustani vocalist who performed but once on stage. The book poignantly traces what drove Dhananjay across that slippery line that the world draws between sanity and madness, and the pain that wrings and mangles the hearts of those who feel life and art a little too deeply. At the same time, the novel figures as a revelry of Hindustani music with its profound knowledge and appreciation of the classical art form.
Bayam Kollalagathu/பயம் கொள்ளலாகாது-Jayathi Karthik/ஜெயந்தி கார்த்திக்
Regular price Rs. 270.00
உடல்மொழிப் புரிதலின் அடிப்படையிலேதான் வாழ்வியல் நகர்கிறது. அந்த வாழ்வியலின் ஒவ்வொரு பக்கமும் பக்குவமாக நகர்த்தப்படும் பட்சத்தில், பிற்காலத்தில் அந்த வாழ்வியல் அர்த்தமுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. அந்தப் பக்குவம் எவற்றிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்று யோசிக்கும்போது, அது நமது உடலிலிருந்துதான் தொடங்கப்பட வேண்டும். இத்தெளிவு கிடைத்துவிடும் பட்சத்தில், அந்த உடலைச் சுமந்து வாழும் பாலினத்தையும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும், பழக வேண்டும், முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற தெளிவும் புரிதலும் கிட்டிவிடும்.
இக்கருத்தை மையமாக வைத்தே இந்த ‘பயம் கொள்ளலாகாது’ நாவல் படைக்கப்பட்டுள்ளது. பள்ளிப் பருவத்தில் படிக்கும் கார்முகில் எதிர்கொள்ளும் பாலியல் சிக்கலை முன்னிறுத்தி அதனூடே அவளின் குடும்பம், உறவு நிலைகள், குழந்தைகளுக்கே உண்டான மனநிலைகள், அவர்களின் அன்றாடப் பாடுகள், மகிழ்வுகள் எனப் பல தகவல்கள் அவற்றினூடே விரிகின்றன. பாலியல் என்ற பாடுபொருளைச் சொல்லவோ பேசவோ தயங்கக் கூடாது. எந்தவொரு தோல்விக்குப் பின்னாலும் வாழ்க்கை இருக்கிறது. அந்தத் தோல்வி பணமோ, பொருளோ, நகையோ, நட்போ, வேலையோ, படிப்போ, காதலோ உடலியல் சீண்டலோ அஃது எதுவாயினும் அதற்குப் பிறகான வாழ்க்கை இருக்கிறது. பதின்பருவம் மட்டுமல்ல, அதன் பிறகான பருவத்திலும் உடல்மொழியில் ஏற்படும் சிக்கல்களை எளிதில் கையாண்டு வாழ முடியும் என்பதே இந்த நாவலின் வழி புலப்படுகிறது.
Neruppu Odu/நெருப்பு ஓடு-Devilingam/தேவிலிங்கம்
Regular price Rs. 240.00
Celyon Pediyan/சிலோன் பெடியன்-N. Jeyarupalingam/ந. ஜெயரூபலிங்கம்
Regular price Rs. 240.00
Ceylon Parotta/சிலோன் பரோட்டா-N.R.பிரபாகரன்/N.R.Prabhakaran
Regular price Rs. 290.00
இந்நாவலுடைய நாயகனின் பெயர் பிரபாகரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய நினைவாக சூட்டப்பட்ட பெயர். அது தவிர அவனுக்கும் தலைவருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. நம் நாயகனோ தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு சாமானியன். ஒரு சமயம் அவன் இலங்கையை நோக்கிப் பயணிக்கிறான். அப்பயணத்தில் அவன் எதிர்கொள்ளும் சுவாரஸ்யங்களையும், அதனூடே இலங்கையின் சமகால வாழ்வியலையும் பேசும் இந்த நாவல், போகிறபோக்கில் விடுதலைப் புலிகளைப் பற்றியும் அதன் தலைவரைப் பற்றியும் அவனுக்குத் தோன்றும் எண்ணங்களை தொட்டுச் செல்கிறது.
Urakkam Thelindha Unmai/உறக்கம் தெளிந்த உண்மை-B. Hemamalini/பா. ஹேமமாலினி
Regular price Rs. 230.00
Stay up-to-date about new collections, events, discounts and more