63 products
Vilaiyaada Vandha Endhira Boodham/விளையாட வந்த எந்திர பூதம் - Perundevi/பெருந்தேவி
Regular price Rs. 120.00
புதிய சொல்முறைகள் சாத்தியம்தானா என்ற தேடல் மட்டுமின்றி பழைய பாணிகள், வடிவங்கள், சொல்லடுக்குகளுடனான பிணக்கும் விடுபடலும் பெருந்தேவியின் கவிதை எழுத்தை நெறிப்படுத்துகின்றன. கவிதை கொண்டு உலகைப் புதிதாய் இன்னொருமுறை தரிசிக்க முடியும் என்ற நப்பாசைக்கும், இல்லை கடையை மூடிக்கொண்டு கிளப்பலாம் என்ற அவநம்பிக்கைக்கும் இடையே உள்ள சாத்தியங்களை மொழிக்குள் கொண்டுவர முயல்பவை இக்கவிதைகள்.
- ஹரி இராஜலெட்சுமி
Nallaangu/நல்லாங்கு - Nesamithran/நேசமித்ரன்
Regular price Rs. 300.00
நீ இல்லாமல் வாழவே
முடியாதென்பதெல்லாம்
பொய்
நீ இருந்தால்
இன்னும் நன்றாக வாழ்வேன்
அவ்வளவுதான்...
- நேசமித்ரன்
Manpuzhuvin Naangavadhu Idhayam/மண்புழுவின் நான்காவது இதயம்-Nesamithran/நேசமித்ரன்
Regular price Rs. 140.00
தொன்மத்தின் சடங்கு மொழியில் நவீன விஞ்ஞானத்தின் சூட்சுமங்களை
நேசமித்ரன் கவிதையாக்குகிறார். அவரது மொழி வேட்கையும்
உயிரினங்களின் மீதான அதீத உற்று நோக்கலும் உயிரினங்களின்
நடத்தைகளை கவிதை மொழியாக்குகின்றன. அதனால்தான் காதுகளே
வௌவாலின் கண்களாக நமக்குத் தெரிகிறது.
ஆகாயம் மற்றும் நிலத் தோற்றங்களின் மீது மொழி மண்புழுபோல் படிந்து
ஊர்கிறது. இவரது கவிதைகளில் ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் புழுத்த
நம்பிக்கைகள் மற்றும் அற எல்லைகள் கடந்த கார்ப்பரேட் யுகத்தின்
வாழ்வுமுறைகள் சாட்சியமாகின்றன.
கவிதை என்பது ஒரு தனித்த துறையல்ல. பல்வேறு துறை சார்ந்த வாசிப்பு
அனுபவங்களிலிருந்து இவர் தமிழ் கவிதைகளுக்கான புதிய கலைச்
சொற்களை உருவாக்குகிறார். அவ்வகையில் நேசமித்ரன் கவிதைகள் தமிழ்
நவீன கவிதையின் விஸ்தரிப்பு.
- செல்மா பிரியதர்ஸன்
Va.Mu. Komu Kavithaigal/வா.மு. கோமு கவிதைகள்
Regular price Rs. 390.00
நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பாலுறவு முறைகளைக்கூட பேசுவதும் எழுதுவதும் பாவமாக
கருதப்படுகிற ஒரு பண்பாட்டுச் சூழல் இங்கு உருவாகி கெட்டிப்படுத்தப்பட்டிருக்கிறது
தாகம் பசி போல பாலுறவும் நம்மால் தவிர்க்கப்பட முடியாத இயல்பான உணர்வுகளில்
ஒன்றாகும். இன்னும் சொல்லப் போனால் இதில் கிடைக்கிற மகிழ்ச்சிக்கும்,
மனநிறைவுக்கும் ஈடு இணை கிடையா. ஆனால் இதைப்பற்றிய எந்த வித
வெளிப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளாத பொதுப்புத்தியை உருவாக்கியுள்ள ஒரு சமூகத்தில்
மாற்றுக் கருத்துகளை பேசவும் எழுதவும் துணிச்சல் தேவை. நிறுவப்பட்டுள்ள ஒழுங்கு
நியதிகளை ஒதுக்கி வைத்து விட்டு திறந்த மனதுடன் படிக்க வேண்டிய கவிதைகள்
இவைகள். கொங்கு மண்ணின் பேச்சு வழக்கிலான கவிதைகள் இத்தொகுதிக்கு கூடுதல்
சிறப்பை சேர்க்கின்றன. இந்தத்தொகுதியின் கவிதைகள் 1991-லிருந்து 2024 வரை
வா.மு.கோமுவால் எழுதப்பட்ட கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவைகள்.
Irandu Gram Yaanai/இரண்டு கிராம் யானை-J.Manjula Devi/ஜே மஞ்சுளாதேவி
Regular price Rs. 180.00
‘ஆதித் தாயை
இன்றும் காட்டும் யானைக் கூட்டம்
அப்பத்தாக்களின் பின்னால்
வரிசையிடும்'
யானைகள் இயற்கையின் அதிசயங்கள் மட்டுமல்ல. நேசத்துக்குரிய பண்புகள் நிறைந்திருக்கும் களஞ்சியங்கள்.
மனிதன் மெச்சத் தகுந்த அறிவுடையவனாயினும் அழிவின் விதைகளை இன்னமும் சுமந்து நிற்கிறான். யானை என்ற வன நாயகன் மூலமாக மனிதனுக்குச் சில உண்மைகளைக் கவிஞர் கனிவோடும் கண்டிப்போடும் சொல்ல விழைகிறார்.
அந்த விழைவின் விளைச்சலே ‘இரண்டு கிராம் யானை’.
புத்தகத்தின் பெயர்தான் ‘இரண்டு கிராம் யானை'யே தவிர கருத்தாலும், வளத்தாலும் கற்பனையாலும் ஆயிரம் பொன் யானை இது என வாசகர்கள் நிச்சயம் உணர்வார்கள்.
- சிற்பி பாலசுப்பிரமணியம்
Oru Claustrophobic Pennum Carlos Endru Peyaridapatta Nathaiyum/ஒரு க்ளாஸ்ட்ரோஃபோபிக் பெண்ணும் கார்லோஸ் என்று பெயரிடப்பட்ட நத்தையும்-Karthika Mukundh/கார்த்திகா முகுந்த்
Regular price Rs. 120.00
“நினைப்பது கமலியா, கார்த்திகாவா? கமலிக்கா
En Thalaikkul Oru Kadal Irukkiradhu/என் தலைக்குள் ஒரு கடல் இருக்கிறது-Karthika Mukundh/கார்த்திகா முகுந்த்
Regular price Rs. 90.00
கார்த்திகாவின் கவிதைகள், கருத்தும் அனுபவமும் முயங்கும் புள்ளியைத் தேடி நகர்கிறவை. காட்சிகளும் அவற்றைப் பற்றிய சிந்தனையோட்டமும் இரண்டறப் பிணைந்திருப்பவை. நனவும் பிரமையும் உருவக மொழியில் பரிவர்த்தனை கொள்ளும் சந்தர்ப்பங்கள். ஓவியம்போன்ற துல்லியம் கொண்ட காட்சிகளை முன்னிருத்தி, உணர்வுவீச்சுகளைப் பதிவுசெய்ய முனைகிறவை.
நவீன உலகின் பொருட்களும், நபர்களும், இடங்களும், உணர்வுகளும் சரளமாக வந்துசெல்லும் கவியுலகம் இவருடையது. தட்டி ஆச்சியும் வான்காவும் காளியும் சிந்திக்கும் ஊசியும் இயல்பாக இடம்பெறும் உலகம். ரப்பா நூயியும், டென்னிஸ் வீரர்களும், சாம்பாரில் ஊறிய பூரியும் நிரம்பியிருக்கும் நூதன உலகம்.
இறுக்கமேயற்ற மொழியில், புகாரற்ற தொனியில், அன்றாடத்தின் மறைபுலத்தைத் தெளிவித்துக்கொள்ள முற்படும் கவிதைகள். துளியும் அவநம்பிக்கையோ புலம்பலோ தொனிக்காதவை. அதற்காக, செயற்கையான நம்பிக்கையை, உற்சாகத்தை ஊட்டுவதுமில்லை.
இடங்களும் காலமும் விளிம்புகளின்றிப் பரந்திருக்கும் கவிதைவெளியில், உருவகங்கள், பிரமைகள்வழி சாதாரணக் காட்சிகள் கூர்மை கொள்கின்றன. தினசரியின் அலகுகளை புனைவின் களத்தில் நிறுத்திக் கையாளும் கவிதைகள் இவை.
- யுவன் சந்திரசேகர்
Pulli Vandugal Prasavikkadha Kaalam/புள்ளி வண்டுகள் பிரசவிக்காத காலம்- P. Kalimuthu/ப. காளிமுத்து
Regular price Rs. 120.00
இன்மையின் அதீத உருவழிதல், விளிம்பு வாழ்வின் சிதிலங்களில் இருந்து தன் மொழிக்கு சாரங்களைப் பெற்றுக் கொள்பவராக, பிரதேச அழகியல் மிளிரும் சொற்களைத் தனது கவிதைகளில் மிகச் சாவகாசமாகக் கையாளும் ஒருவராக இந்தத் தொகுப்பின் வழி தனது புதிய அடையாளங்களுடன் வெளிப்பட்டிருக்கிறார் கவிஞர் காளிமுத்து
மொழிக்குள் விரும்பி ஒளிந்து கொள்ளும் தன்மை அதன் அடர்வில் புதிர்த்தன்மையை ஏற்றி விடுகிறது. வாழ்வில் வெதுவெதுப்பான தண்ணீரை, ஒரு முன்மதிய நேரத்து நிழலை உவமையாக்குவது மாதிரி அதிகப் பிரயத்தனங்களற்ற ஒரு தனி நடையை இவரது கவிதைகளில் காண முடிகிறது.
- நேசமித்ரன்
Claude Monetyin Marathadi Pen/களாட் மோனெயின் மரத்தடிப் பெண்-Karthika Mukundh/கார்த்திகா முகுந்த்
Regular price Rs. 70.00
நாம் விழித்துக்கொள்ள விரும்பாத கனவொன்றை இக்கவிதைகளால் உருவாக்கி அளித்திருக்கிறார் கார்த்திகா. இங்கே பரபரப்பான மாநகரச் சாலையொன்றின் நடுவே ஒரு சிறிய நீரோடை உலகை சிருஷ்டிக்கிறார். ஓடை போல முன்னோக்கியே ஓடும் காலம், ஊஞ்சல்போல பின்னோக்கியும் வந்தால் என்ன என ஏங்குகிறார். தன் கவிதைகள் மூலம் அந்த ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்ளவும் செய்கிறார். கடந்த காலத்தின் திரும்ப முடியாத உலகங்களை மட்டுமல்ல, நிகழ்காலத்தில் நாம் சாதாரணமாகத் தவறவிடும் உலகங்களையும், தருணங்களையும் தன் கவிதைகளில் உறைய வைத்து விடுகிறார்.
சக மனிதர்களையும், மிருகங்களையும், பறவைகளையும், ஆமவடைகளையும் பரிவுடன் பார்க்கும் தருணங்கள் வழியாக சாதாரண உலகத்தின் பின்னாலிருக்கும் அதிசாதாரண உலகுக்கு ஒரு பிடி கிடைக்கிறது.
ஆமவடைகளைப் போல அரிய, பரிபூரணமான, எளிய, சின்னஞ்சிறு கவிதைகள் நிறைந்த இந்தத் தொகுப்பு படிக்கத் திகட்டுவதில்லை.
- முகுந்த் நாகராஜன்
En Paadhangalil Padarum Kadal/என் பாதங்களில் படரும் கடல்- Dhamayanthi/தமயந்தி
Regular price Rs. 90.00
Jelly Meengal Karaiyodhungum Kadal/ஜெல்லி மீன்கள் கரையொதுங்கும் கடல்-Nesamithran/நேசமித்ரன்
Regular price Rs. 210.00
Nooru Kudhiraigal Dhooramulla Aaru/நூறு குதிரைகள் தூரமுள்ள ஆறு-Mounan Yathrika/மௌனன் யாத்ரிகா
Regular price Rs. 110.00
Indha Puvikku Undhan Peyariduven/இந்தப் புவிக்கு உந்தன் பெயரிடுவேன்-Kutti Revathi/குட்டி ரேவதி
Regular price Rs. 110.00
Mazhaiyaalum Veyilaalum Aanavargal/மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள்-J.Manjula Devi/ஜே மஞ்சுளாதேவி
Regular price Rs. 200.00
Oru Karathilirundhu Maru Karathirkku/ஒரு கரத்திலிருந்து மறு கரத்திற்கு-Thara Ganesan/தாரா கணேசன்
Regular price Rs. 140.00
KAI NAZHUVUM KAALAM/கை நழுவும் காலம் - Sirpi/சிற்பி
Regular price Rs. 120.00
Moovayiram Aandu Kadhal Mozhigal/மூவாயிரமாண்டு காதல் மொழிகள் -Kutti Revathi/குட்டி ரேவதி
Regular price Rs. 90.00
Thumi/துமி-Karthika Mukundh/கார்த்திகா முகுந்த்
Regular price Rs. 120.00
oonmughizh mirugam/ஊன்முகிழ் மிருகம்-Savitha/சவிதா
Regular price Rs. 140.00
kutti Revathi Kavithaigal Part 3/குட்டி ரேவதி கவிதைகள் தொகுதி 3
Regular price Rs. 400.00
Kavithai Porul Kollum Kalai/கவிதை பொருள் கொள்ளும் கலை-Perundevi/பெருந்தேவி
Regular price Rs. 200.00
Avan Kannathil Hybrid Sevvarali Pookirathu/அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது -Perundevi/பெருந்தேவி
Regular price Rs. 120.00
Murugiyam/முருகியம்- Thenmozhi Das/தேன்மொழி தாஸ்
Regular price Rs. 180.00
Aanglin Kanivaana Gavanathirku/ஆண்களின் கனிவான கவனத்திற்கு -J.Manjula Devi/ஜே மஞ்சுளாதேவி
Regular price Rs. 130.00
Miga Neenda Udalin Thuyaram/மிக நீண்ட உலகின் துயரம் -Pavithra/பவித்ரா
Regular price Rs. 120.00 Sale price Rs. 100.00 Save 17%
Smashan Thara/ஸ்மாஷன் தாரா-Charu Nivedita/சாரு நிவேதிதா
Regular price Rs. 350.00
Oomathai Neelam/ஊமத்தை நீலம்- Prabhu Gangadharan/பிரபு கங்காதரன்
Regular price Rs. 170.00 Sale price Rs. 145.00 Save 15%
Maatru Padhayil oru payani/ மாற்றுப் பாதையில் ஒரு பயணி-Yavanika Sriram/யவனிகா ஸ்ரீராம்
Regular price Rs. 150.00 Sale price Rs. 125.00 Save 17%
Stay up-to-date about new collections, events, discounts and more