338 products
Veyil Anindhavan/வெயில் அணிந்தவன்-Balajothi Ramachnadran/பாலஜோதி ராமச்சந்திரன்
Regular price Rs. 260.00
எழுதுகிறவன் செயல்படும்போது, அவன் அறியாமலே தன் போக்கில் சில முன் திட்டமிடாத கதவுகளைத் திறப்பான், அதை மூடாமலே விட்டு விட்டு இன்னொரு கதவைத் திறக்கப் போய்விடுவான். பாலஜோதியின் ஒரு கதையின் கண்ணி இன்னுமொரு கதையின் கண்ணியில் கோக்கப்படுகிறது. இதில் வரும் மனிதர் அதில் நடமாடுகிறார். உங்களை அந்தக் கதையில் பார்த்தேனே, அவர்தானே நீங்கள்? என்று கேட்டால் ஒன்றும் சொல்லாமல் அவர்கள் நகர்ந்துவிடுகிறார்கள்.
ஒரு கதை வெயிலை அணிந்தால் இன்னொரு கதை அதைக் களைந்து வைக்கிறது. ஒரு தீனதயாளன் இன்னொரு கதையில் நடமாடுகிறார். ஒரு ஜெயராம் சார் பரோட்டா வாத்தியார் கதையில் ஜே. ஆர். சார் ஆகி சந்திரபாபு பாட்டுப் பாடுகிறார். மருதநாயகம் உட்கார்ந்திருக்கும் ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் சுப்பு அண்ணா உட்கார்ந்திருக்கிறார். சூர்யா ஒரு திருநங்கை என்றால் மகாதேவியும் அப்படித்தான்.
- கல்யாணி.சி
Ezhuper/ஏழுபேர்-Ka. Naa. Subramanyam/க. நா. சுப்ரமண்யம்
Regular price Rs. 140.00
க.நா.சு என்று பரவலாக அறியப்படும் க. நா. சுப்ரமண்யம், (கந்தாடை சுப்ரமண்யம், ஜனவரி 31, 1912 - டிசம்பர் 18, 1988), ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.
தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை எனும் ஊரில் பிறந்த க.நா.சு, சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார். உலக இலக்கியத்திற்கு இணையாக தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட க.நா.சு, தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கடுமையாக உழைத்தார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார். “பொய்த்தேவு” புதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு. 1986ம் ஆண்டு “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இவரது இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு இவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கியது.
Kallam/கள்ளம்-Thanjai Parkash/தஞ்சை பிரகாஷ்/நாவல்
Regular price Rs. 290.00
‘கள்ளம்' இன்றைய கலைஞன் ஒருவனின் கள்ளம். வாழும் தந்திரம். கனவல்ல நிஜம்! தஞ்சாவூர் என்ற பழைய தலைநகரைச் சுற்றிலும் இதுபோன்ற பழைய கனவுகள் நிஜமாகிக்கொண்டிருக்கின்றன. இதை நம்ப இலக்கியவாதி கொஞ்சம் சஞ்சலப்படுவான் என்பது எனக்குத் தெரியும். தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை செய்கிற சாதாரண (Craft) தொழில் கலைஞனும்கூட. இடிந்து நொறுங்கும் வாழ்விலிருந்து நீந்திப் புதிய முட்டையை உடைத்துச் சிறகடித்து மேலே உயரும் மனிதர்களை, அவர்களின் கள்ளத்தை அவை இரண்டையும் ஒரே நேரத்தில் நிரூபணம் செய்கிறது இந்த நாவல். ‘தஞ்சாவூர் சித்திரப்படம்’ என்ற பெயரில் நலிந்து நாசமாகிய பழைய வரலாற்றை நான் எனது நாவலில் சொல்ல வரவில்லை. அந்த சோகத்தைப் பேசவில்லை என்ற என் நண்பனுக்கு எனது பதில் ‘கள்ளம்' என்பதே! இத்தகைய வாழ்க்கையை இப்படிக் காண்பது என்பது இலக்கியத்தில் மட்டுமே சாத்தியம். வரலாற்றில்கூட ஏன் விஞ்ஞானத்தில்கூட சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்தப் படைப்பு சாத்தியம் ஆகும்.
- தஞ்சை ப்ரகாஷ்
Uyirkaadu/உயிர்க்காடு-Ka. Naa. Subramanyam/க. நா. சுப்ரமண்யம்/கு. பத்மநாபன் /கட்டுரைகள்
Regular price Rs. 210.00
ஐரோப்பிய நாவல் வடிவங்களை மோகமுள் நாவலுக்குள் பொருத்திப் பார்ப்பதும், அளந்து பார்ப்பதும் ஒரு நாவலை மதிப்பிடுவதற்கான கருவிகள் அல்ல. மோகமுள் தமிழ் மண்ணில் வேரூன்றி நிற்கும் பெருமரம். அதன் இலைகளின் நடனமும் அடர்த்தியும் உயரமும் அகலமும் வேறானவை. கனிகளின் வடிவும், பளபளப்பும், சதைப்பற்றும், சுவையும் வேறானவை. அதன் அடிமரமும் பட்டையும் நிறமும் வைரமும் வேறானவை. பூமிக்குள் புதைந்திருக்கும் பின்னலும் நீர் தேடிச்சென்ற அதன் நாக்குகளும் வேறானவை.
- சு. வேணுகோபால்
வாழப் பிறந்தும், வாழ முடியாத சோகத்தைப் பேசுவதுதான் தி.ஜா.வின் கதை உலகம். ஆனால், அது தீவாந்தரத் தனிமையின் கசந்த உலகம் இல்லை. தாயார்கள், அண்ணிகள், தகப்பனார்கள், சகோதரர்கள், காதலர்கள், குழந்தைகள், பிற ஒத்துணர்வுள்ளவர்கள் என எல்லோரும் நிறைந்த ஓர் உயிர்ப்பின் உலகமே அது. ஆனால், அந்த இயல்புலகிற்குள்ளும், ஒவ்வொருவருக்குமேயான ஓர் அந்தரங்க உள்ளுலகமும் இருக்கத்தான் செய்கிறது. ‘பெரிய பர்வதத்தின் அடியில் நிற்கும்' பேரனுபவத்தைப் பெற விழைவோர், மீண்டும் மீண்டும், தி.ஜானகிராமனைத் தவறாமல் வாசிப்பார்கள்.
- கல்யாணராமன்
தி. ஜா. மனித அகத்தின் ஆழங்களை அவற்றை இயக்கும் ஆதி விசைகளான காமம், குரோதம், பொறாமை, வஞ்சம் ஆகியவற்றையும், ஒளி மிக்க பகுதிகளான தேர்ந்த ரசிகத்தன்மை, அழகுணர்ச்சி, இசை, தன்முனைப்பு, தியாகம் ஆகியவற்றையும் நெய்து அளித்தவர். அவரது படைப்புகளில் இரண்டும் ஒன்றையொன்று இட்டு நிரப்பும் துலாக்கோல் தன்மையை முயல்வனவாக அமைந்திருக்கும்.
- ஜா. ராஜகோபாலன்
சாக்த வழிபாட்டில் தன் ஆன்மீக வாழ்வைத் துவங்கி, அத்வைதத்தில் கனிந்து, இறுதியில் நவீன வேதாந்தத்துக்கு வெகு அருகில் காமேஸ்வரன் வந்து சேர்வதை நளபாகம் நாவல் வழி அறியமுடிகிறது.
- கு. பத்மநாபன்
Bharathi Thondriya Kaalam/பாரதி தோன்றிய காலம்-Ka. Naa. Subramanyam/க. நா. சுப்ரமண்யம்/துரை. லட்சுமிபதி/கட்டுரைகள்
Regular price Rs. 220.00
க.நா.சு. வாழ்ந்தபோதும், அவர் மறைவிற்குப் பிறகும் அவருடைய இலக்கிய எதிரிகள் மட்டுமல்லாமல், இலக்கிய நண்பர்களும் அவர்மீது தொடர்ந்து புகார் கூறியுள்ளனர். அப்படி அவருடைய இலக்கிய நண்பர் ஒருவர் கூறிய புகார், ‘பாரதி பற்றி அவரிடம் ஒரு மௌனம் இருந்தது. பாரதியைக் குறை சொல்லி எதுவும் எழுதினதும் இல்லை, சொன்னதும் இல்லை. அதுபோல் பாரதியைப் பாராட்டி எதுவும் சொன்னதும் இல்லை, எழுதினதும் இல்லை’ என்பது.
இவ்வரிகளில் உண்மை சிறிதும் இல்லை என்பதை இந்நூல் ஐயமற நிரூபிக்கிறது. இதுவரை நூல்வடிவம் பெறாத அரிய கட்டுரைகளைத் தேடியெடுத்து, காலவரிசையில் அமைத்து, நேர்த்தியான தொகுப்பைத் தந்திருக்கிறார் துரை. லட்சுமிபதி. க.நா.சு.வின் ஆழமும் தெளிவும் கூடிய விமர்சனப் பார்வை பாரதி நிகழ்த்திய சாதனைகளின் மகத்துவத்தைப் புலப்படுத்துகிறது. பாரதியியல் பனுவல்களில் கவனிக்கவேண்டிய முக்கியமான புதுவரவு இத்தொகுப்பு.
Moondru Viral/மூன்று விரல்- Era.Murugan/இரா. முருகன்
Regular price Rs. 460.00
இந்த நாவலில் வளைய வருகிறவர்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் தொழிலில் ஈடுபட்டவர்கள். ஆனால், தலையில் கொம்பு முளைக்காத, சட்டைப் பையிலும் கைப்பையிலும் டாலர் நோட்டுகள் பிதுங்கி வழிய, கழுத்தை இறுக்கும் டையும் கோட்டும் நுனி நாக்கு ஆங்கிலமுமாக சூயிங்கம்மை மென்றபடி தரைக்கு மேலே சரியாக பத்து சென்டிமீட்டர் உயரத்தில் மிதக்காத சாதாரண மனிதர்கள் இவர்கள்.
‘அவனா... அமெரிக்காவிலே பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியிலே மாசம் பத்து லட்சம் சம்பாதிச்சு லாஸ் ஏஞசல்ஸிலே வீடும் காரும் வெள்ளைக்காரி தொடுப்புமா இருக்கானாம்...' என்று பொருமி வியத்தலும், ‘கம்ப்யூட்டர்காரங்களுக்கு எல்லாம் அஷ்டமத்திலே சனி பிடிச்சு தொழிலே நசிஞ்சுபோய், அவனவன் ராயர் காப்பி ஹோட்டல்லே வாழைக்காய் நறுக்கிக் கொடுத்திட்டுக் கிடக்கானாம்... நல்லா வேணும்' என்று இருமி எச்சில் உமிழ்ந்து இகழ்தலும் இங்கே இலமே!
*
இதுவரை 12 நாவல்கள் எழுதிய இரா.முருகனின் முதல் நாவல் இது. கம்ப்யூட்டர் மென்பொருளாளர் பற்றித் தமிழில் வந்த முதல் நாவலும் இதுவே.
Nandu Maram/நண்டு மரம் -Era.Murugan/இரா. முருகன்
Regular price Rs. 370.00
கம்ப்யூட்டர் கம்பெனியில், அதுவும் உலகப் பிரசித்தியான நிறுவனத்தில் சீனியர் மேனேஜர் உத்தியோகம் பார்ப்பது மாதிரித் தொல்லை பிடித்த சமாச்சாரம் வேறு எதுவும் இல்லை. தலைக்கு மேலே உட்கார்ந்து முதலாளி வர்க்கம் ‘இருபது மில்லியன் டாலர் பிசினஸ் இந்த வருடம் பிடித்துக்கொண்டு வராவிட்டால் வயிற்றுக்குக் கீழே ஆப்பரேஷன் செய்து நீக்கிவிடுவோம்’ என்று உத்தரவு போட்டுக் கத்தரிக்கோலோடு காத்திருப்பார்கள். வாரம் ஏழு நாள் இருபத்து நாலு மணி நேரம் வெள்ளைக்காரத் துரைகளின் கழிப்பறையைக் கழுவி, கால் பிடித்து விட்டு சிஷ்ருஷை செய்தாலும் ஒரு டாலர் அதிகமாக பிசினஸ் பெயராது என்பது அவர்களுக்கும் தெரியும். இருப்பதும் கைநழுவிப் போகாமல் காப்பதற்காக மேற்படி கஸ்டமர் துரை, துரைசாணிகளுக்கு உள்ளாடை துவைத்துப் போடுகிறது தவிர மற்ற சகலமான குற்றேவலும் செய்யத்தான் என்னை சீனியர் மேனேஜராக்கிக் கண்ணாடிக் கூண்டில் அடைத்து பெரிய ஹாலில் ஐநூறு புரோகிராமர்கள், பிராஜக்ட் லீடர், பிராஜக்ட் மேனேஜர் வர்க்கங்களுக்கு நடுவே உட்கார்த்தியிருக்கிறார்கள்.
Era.Murugan kathaigal/ இரா.முருகன் கதைகள்-Era.Murugan/இரா.முருகன்
Regular price Rs. 940.00
‘மாடியிலே கடை போடலாமா?’ ரங்கம்மா அப்படிச் சொன்ன அடுத்து விநாடி மாடியில் ஏதோ தடதடவென்று தரையில் உருளும் சத்தம். ரங்கம்மா கலவரப்பட்டுப் போனாள்.
‘என்ன சத்தங்க அது?' ‘ஒண்ணுமில்லே... நீ சொன்னது பெரியாத்தாவுக்கு பிடிக்கலே.' சென்னகேசவன் சாதாரணமாகச் சொன்னபடி மாடியைப் பார்த்தான். ‘அது ஏதோ சின்னப்புள்ளே தெரியாமச் சொல்லிடுத்து. நீ எதுக்குக் கெடந்து குதிக்கறே. பேசாம இரேன்.' உரக்கச் சொல்லிவிட்டுத் தலையைத் திருப்பி ரங்கம்மாவைப் பார்த்துச் சிரித்தான் அவன். ‘மாடியிலே யாருங்க?' ரங்கம்மா உடம்பு முழுக்கப் பயம் கவிந்துவர, சென்னகேசவனை இறுகப் பிடித்துக் கொண்டாள்.
‘ஒண்ணுமில்லே, சொல்றேன். நீ உட்காரு.' அவளைத் தரையில் உட்கார வைத்துவிட்டு வாசலுக்குப் போய் எலுமிச்சம்பழ மிட்டாய் எடுத்து வந்து கொடுத்தான். அவள் தலையை வருடிக்கொண்டே சொன்னான்: ‘பெரியாத்தா ரொம்ப வருசமா இங்ககேயேதான் இருக்கு. எங்க முப்பாட்டன் சம்சாரம். தாத்தாவோட அப்பாவுக்கு அம்மா.'
‘இத்தினி நாளு எப்படி உசிரோட இருக்காங்க?' ரங்கம்மா புரியாமல் பார்த்தாள்.
Araathu Books Complete collection offer
Regular price Rs. 3,605.00 Sale price Rs. 2,523.00 Save 30%
Araathu books-Complete collection 16 titles
En Paadhangalil Padarum Kadal/என் பாதங்களில் படரும் கடல்- Dhamayanthi/தமயந்தி
Regular price Rs. 90.00
Vamsa Virutsham/வம்ச விருட்சம்-S.L.Bhyrappa/எஸ். எல். பைரப்பா
Regular price Rs. 600.00 Sale price Rs. 480.00 Save 20%
Vaidheeswaran Kathaigal/வைதீஸ்வரன் கதைகள்-Vaidheeswaran/வைதீஸ்வரன்
Regular price Rs. 340.00
Kaanbor Vaasippugal/காண்போர் வாசிப்புகள்- A Ramasamy/அ ராமசாமி
Regular price Rs. 340.00
Panpaattu Vaasippugal/பண்பாட்டு வாசிப்புகள் - A Ramasamy/அ ராமசாமி
Regular price Rs. 290.00
Aroo Ariviyal Sirukathaigal 4/அரூ அறிவியல் சிறுகதைகள் 4
Regular price Rs. 390.00
Girish Karnad M.S. Moorthy Nadaganagal-/கிரீஷ் கர்னாட் -எம். எஸ். மூர்த்தி நாடகங்கள்
Regular price Rs. 170.00
Neermul/நீர்மூள்-Senthilkumar Natarajan/செந்தில்குமார் நடராஜன்
Regular price Rs. 160.00
Oviyam Pondra Ezhuthukkalaal Varayappatta Kottoviyam/ஓவியம் போன்ற எழுத்துகளால் வரையப்பட்ட கோட்டோவியம்-Vasto/வாஸ்தோ
Regular price Rs. 170.00
Ruskin Bond Sirukathaigal - 1/ரஸ்கின் பாண்ட் சிறுகதைகள்-1
Regular price Rs. 660.00
Jelly Meengal Karaiyodhungum Kadal/ஜெல்லி மீன்கள் கரையொதுங்கும் கடல்-Nesamithran/நேசமித்ரன்
Regular price Rs. 210.00
Nooru Kudhiraigal Dhooramulla Aaru/நூறு குதிரைகள் தூரமுள்ள ஆறு-Mounan Yathrika/மௌனன் யாத்ரிகா
Regular price Rs. 110.00
Indha Puvikku Undhan Peyariduven/இந்தப் புவிக்கு உந்தன் பெயரிடுவேன்-Kutti Revathi/குட்டி ரேவதி
Regular price Rs. 110.00
Isaikka Seiyum Isai/இசைக்கச் செய்யும் இசை-Karundhel Rajesh/கருந்தேள் ராஜேஷ்
Regular price Rs. 240.00
Mazhaiyaalum Veyilaalum Aanavargal/மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள்-J.Manjula Devi/ஜே மஞ்சுளாதேவி
Regular price Rs. 200.00
Aral/அறல்-Rajesh Vairapandian/ராஜேஷ் வைரபாண்டியன்
Regular price Rs. 150.00
Akk Pulligal/ஃ புள்ளிகள்-I. Kiruthiga/ஐ. கிருத்திகா
Regular price Rs. 150.00
Perungaliru/பெருங்களிறு-C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
Regular price Rs. 220.00
Stay up-to-date about new collections, events, discounts and more